Wednesday, April 17, 2024

ஆனந்தம்....!

 துபாய் கனமழை, வெள்ளம்....!

மக்கள் ஆனந்தம்....!!



தகவல்....!

பாஜக ஒரு ஃபேக் நியூஸ் ஃபேக்டரி என்பது ஒரு சர்வதேச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

சிங்கப்பூர் அரசின் 'Channel News Asia'  என்ற செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பது அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள். ட்ரோல்கள் மற்றும் போலி வீடியோக்கள் உள்ளிட்ட ஆன்லைன் பரப்புரைக்காக பாஜக 50000 வரை மாத சம்பளம் கொடுத்து Freelancer களை பணியமர்த்தி போலி பிரச்சாரத்தை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. 

இவர்கள் பேக் நியூஸ் மூலம் மட்டுமே இருமுறை ஆட்சியை கைப்பற்றியிருப்பது தற்போது நிரூபணம்.



வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல.....!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல, கட்டாயக் கடமையும் கூட...!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தற்போது தேர்தல் திருவிழாக் காலம் தொடங்கியுள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா, வரும் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி, முதல்கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள  102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக செய்துள்ளது. 

முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தக் கட்டப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனால், தேர்தல் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நூறு சதவீத வாக்கு என்ற இலக்கை எட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் தேர்தலில் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. 

வாக்களிப்பது உரிமை:

ஜனநாயக நாட்டில் மக்களின் மிகப்பெரிய உரிமையாக இருப்பது வாக்கு என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மக்கள் சரியாகப் பயன்படுத்தி, நாட்டில் நல்லாட்சியை  உருவாக்க வேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை தகுந்த முறையில் பயன்படுத்தி, நல்லவர்களை தேர்வு செய்வதன் மூலம், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் தழைத்து நிற்கும். ஜனநாயகம் எப்போதும் வலுவாக இருக்கும். 

எனவே, தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு இந்தியர்களும் கலந்துகொண்டு, தங்கள் உரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்படி, திருவிழாக் காலங்களில், அனைவரும் ஒன்றுக் கூடி, மகிழ்ச்சி அடைந்து அதை உற்சாகமாக கொண்டாடுகிறோமோ, அதைப் போன்று, தேர்தல் திருவிழாவிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு, காலை 7 மணிக்கே சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு உரிமையை நல்ல முறையில் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்ய வேண்டும். 

மக்கள் தங்களின் உரிமையை சரியாகப் பயன்படுத்தினால், நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்படுவார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களின் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவார்கள். அத்துடன் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவார்கள். எனவே, இதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்காளர்களும், தங்களின் வாக்கு உரிமையைப் பயன்படுத்த வேண்டும். 

வாக்களிப்பது கடமையும் கூட: 

தேர்தல் திருவிழாவில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது நாட்டு மக்களின் உரிமை மட்டுமல்ல, அது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையும் ஆகும். இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய வேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், நாட்டில் உள்ள 97 கோடி வாக்காளர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை கட்டாயக் கடமையாகக் கருதி, நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். 

மக்களில் பலர், சோம்பலுடன் இருந்துவிட்டு, தங்களது கடமையை நிறைவேற்ற தவறுவதால், நல்லாட்சி கிடைக்காமல் போகிறது. இதற்கு நல்ல உதாரணம், கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சி என்றே கூறலாம். கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு வெற்று முழக்கங்களை தவிர மிகப்பெரிய அளவுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. 

ஜனநாயக நெறிமுறைகளை குழித்தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்தார்கள். மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் வாழும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இடையே குழப்பங்களை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெற பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். 

அதன் காரணமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், போன்ற திட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும், இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருந்து வரும்நிலையில், பா.ஜ.க.வின் இதுபோன்ற அறிவிப்புகள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்காது. இதனால், மிகப்பெரிய குழப்பங்கள் தான் ஏற்படும். 

எனவே, தேர்தல் திருவிழாவில் கலந்துகொள்ளும் மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை, வேடிக்கைப் பார்க்காமல், கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தற்போது நாடு சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு, நாட்டில் மீண்டும் ஜனநாயக நெறிமுறைகள் மிகவும் அற்புதமாக செயல்பட ஒவ்வொரு வாக்காளர்களும், கட்டாயமாக வாக்களிக்க மறந்துவிடக் கூடாது. 

நல்ல வாய்ப்பு:

18வது மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு நாட்டின் தலைவிதியை, எதிர்காலத்தை மாற்றி அமைக்க  நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த அற்புதமான வாய்ப்பை, வாக்காளர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு, தற்போது நாட்டில் உள்ள நிலைமை என்ன? தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள், தீமைகள் என்ன? நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் இருந்து வருகின்றனவா? நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுச் செல்ல யாரை தேர்வு செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு, வாக்களிக்கச் செல்ல வேண்டும். 

முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் சரியான முறையில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லுவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் சிறுபான்மையின மக்கள், இந்த முறை உடைக்க வேண்டும். சாரை சாரையாக வாக்குச்சாவடிக்குப் படையெடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். ஒருவிரல் புரட்சி மூலம் நாட்டில் நல்லாட்சி மலர வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது உரிமை மட்டுல்ல, அது கட்டாயக் கடமையும் கூட என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நம்பிக்கை.....!

 நாடாளுமன்றத் தேர்தல்.....!

ராகுல் காந்தி கணிப்பு....!!



Tuesday, April 16, 2024

பேட்டி....!

பா.ஜ.க.வின் பொதுச் சிவில் சட்டம் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி…!!

ஆம்பூர், ஏப்.17- பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்து இருப்பது, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமாகும் என இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 16.04.2024 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் என கூறினார். மதச்சார்பின்மைக்கு மூலமாக திருக்குர்ஆன் இருக்கிறது. அந்த மதர்ச்சார்பின்மை இந்தியாவில் உள்ளது. உலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஒரே இனமாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 

இந்தியாவில் தனித்தன்மை:

உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் இல்லாத தனித்தன்மை இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 சமுதாயங்கள் உள்ளன. இந்த 4 ஆயிரத்து 698 சமுதாயங்களிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்திலும் பல்வேறு விதமான சடங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மதத்தின் அடிப்படையில், மார்க்கத்தின் அடிப்படையில், இஸ்லாமியர்களாக இந்தியாவில் 25 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். 

பொது சிவில் சட்டம் ஏற்க முடியாது:

இவ்வாறான நிலையில், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுல்ல, உலக முஸ்லிம்களுக்கும் எதிரானது. 

பா.ஜ.க. தோல்வி அடையும்:

நாடாளுமன்றத் தேர்தலில் 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். இந்த வெற்றிக்குப் பிறகு இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி பிரதமரை தேர்வு செய்யும். இனி வரும் நாட்கள் மிகச் சிறப்பான நாட்களாக அமையும். இந்தியா கூட்டணி ஆட்சியில் நாடு சிறப்பான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் எட்டும். நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களையும் பூர்த்திச் செய்யும் விதமாக இந்தியா கூட்டணி ஆட்சி இருக்கும். நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ இந்தியா கூட்டணி சிறப்பான பணிகளை செய்யும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். 

பேட்டியின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், மாவட்ட அமைப்பாளர் ரபீக் அகமது, மாவட்ட செயலாளர் ஹுசேன் அஹமத், மாவட்ட பொருளாளர் அப்துல் அஜீஸ், ஆம்பூர் நகர தலைவர் அயாஸ் அஹமத், நகர செயலாளர் ஹம்மத் அக்ரம், நகர பொருளாளர் அஷ்பாக் அஹமத், அன்ஸர் ஷரீப், நதீம் அஹமத், சுஹேல் அஸ்லம் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கேள்வி...்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 

செய்த சாதனைகள் என்ன?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி….!!

வாணியம்பாடி,ஏப்.17- தமிழகத்தில் தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் போல, ஒன்றிய பா.ஜ.க. அரசு பத்து ஆண்டுகளில் சாதனைகளை செய்து இருக்கிறதா என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பியுள்ளர். 

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குகளை சேகரித்தார். 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 16.04.2024 அன்று பேராசிரியர் தீவிரப் பிரச்சாரம் செய்து, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

வாணியம்பாடியில் பிரச்சாரம்:

ஆலங்காயம், வாணியம்பாடி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் இருந்தபடி, பிரச்சாரம் செய்த அவர், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பேராசிரியர், 18வது மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர் கூறினார். 

தி.மு.க. அரசின் சாதனைகள்:

தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் என தி.மு.க. அரசின் சாதனைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே போய்கிறது.

அனைத்துத் தரப்பு மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பான முறையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் காரணமாக தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு அருமையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை தொடங்க ஆர்வத்துடன் வந்துக் கொண்டு இருக்கின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தி.மு.க. அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

பா.ஜ.க.வின். சாதனைகள் என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. அதன் பட்டியல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறார். 

ஆனால், ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செய்த பணிகள் என்ன? வேலைவாய்ப்புகளைப் பெருக்க, அதிகரிக்கச் செய்த திட்டங்கள் என்ன? இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைப் பட்டியலை வெளியிட்டு மக்கள் மத்தியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதைப் போன்று, பா.ஜ.க. தலைவர்கள் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க முடியுமா? வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, பா.ஜ.க.வினர் மக்களை குழப்பி வருகிறார்கள். 

கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவொரு சாதனைகளையும் நிகழ்த்தாமல் தற்போது மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வர பிரதமர் மோடி, ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால், நாட்டு மக்கள் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியைக் குறித்து நன்கு விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள். 

பத்து ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை இனி வரும் நாட்களில் அவர்களால் செய்ய முடியுமா? என மக்கள் கேள்விக் கேட்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.விற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். 

மறக்காமல் வாக்களிக்க வேண்டும்:

வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் கட்டாயம் கலந்துகொண்டு தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் வீடுகளில் உள்ள அனைவரும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். 

தி.மு.க. அரசின் சாதனைகயும், பா.ஜ.க.வின் பத்து ஆண்டுக் கால வேதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும். வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். எனவே, மக்கள் மறக்காமல் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

பங்கேற்றவர்கள்:

வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், திருப்பத்தூர் மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் எஸ்..டி.நிஸார் அகமது, வாணியம்பாடி நகரத் தலைவர் நரி முஹம்மது நயீம், துணைத் தலைவர் பாருக், இ.யூ.முஸ்லிம் லீக் பேச்சாளர் குண்டு பைசான், வர்த்தகர் அணியைச் சேர்ந்த முதஸ்சிர் காலித், நூருத்தீன் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், திரளாக கலந்துக் கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தீவிரப் பிச்சாரம் செய்தபோது, அவருடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர் அப்துல் பாசித் உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதுடன், பிரச்சாரத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் செய்தனர். இதேபோன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் செய்து இருந்தனர். பேராசிரியர் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

பேச்சு....!

 சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் பிரச்சாரம் ....!